Skip to main content

பௌதீக உலகின் பாதையானது லாபமோ நஷ்டமோ இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது

 


ஏதஸ்மின் ஸம்ஸாராத்வனி நானா - க்லேஸோபஸர்க - பாதித ஆபன்ன - விபன்னோ யத்ர யஸ் தம் வாவேதரஸ் தத்ர விஸ்ருஜ்ய ஜாதம் உபாதயா ஸோசன் முஹ்யன் பிப்யத் - விவதன் க்ரந்தன் ஸம்ஹ்ருஷ்யன் காயன் நஹ்யமான ஸாது - வர்ஜிதோ நைவாவர்ததே ()த்யாபி யத ஆரம்த ஏஷ நர - லோக - ஸார்தோ யம் அத்வன பாரம் உபதிஸந்தி.


மொழிபெயர்ப்பு


பௌதீக உலகின் பாதையானது பௌதீகத்துன்பங்கள் நிறைந்ததாகும். மேலும் பல்வேறு துன்பங்கள் பந்தப்பட்ட ஆத்மாவை இடையூறு செய்கின்றன. சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான். சிலசமயம் இலாபமடைகிறான். இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது. சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மரணம் அல்லது வேறு வழியில் தன் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுக்கிறான். அவரை விட்டு வந்தவுடன் அவன் படிப்படியாக தன் குழந்தைகள் போன்ற பிறரிடம் பற்றுடையவானகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான். சிலசமயம் அவன் அச்சங்கொண்டு கூக்குரலிட்டு அழுகிறான். சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதினால் மகிழ்ச்சியடைகிறான். இம்மகிழ்ச்சி அதிகரிக்கும் பொழுது சிலசமயம் இனிமையாகப் பாடுகிறான். இவ்வாறு காலாகாலமாக முழுமுதற் கடவுளுடன் தனக்கிருந்த உறவினை மறந்து சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்கிறான். இப்பாதையிலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையிலிருந்து வெளிவர உணர்வு பெற்றோர் முழுமுதற் கடவுளைச் சரணடைய வேண்டும். பக்தித் தொண்டுப் பிடியிலிருந்து மீளமுடியாது. இதன் முடிவு பௌதீக வாழ்க்கையில் ஒருவன் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதேயாகும். ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.


பொருளுரை


பௌதீக வாழ்க்கை முறையை நன்கு ஆராய்ந்த பிறகு ஒரு புத்திசுவாதீனமுடையவன் இவ்வுலகில் துளியளவு இன்பம் கூட இல்லை என்பதைப் புரிந்து கொள்வான். ஆயினும் காலாகாலமாக இந்த ஆபத்தானப் பாதையில் பயணம் செய்வதினாலும், தெய்வீக மகான்களிடம் தொடர்பு கொள்ளாததினாலும் பந்தப்பட்ட ஆத்மா மாயையினால் இப்பௌதீக உலகினை அனுபவித்து மகிழ விரும்புகிறான். ஆயினும் பந்தப்ட்ட ஆத்மா ஜட இயற்கையினால் நித்தியமாகத் தண்டிக்கப்படுகிறான். அதனால்தான்தண்ட்ய ஜனே ராஜா யேன நதீதே சுபாய (சை.. மத்ய 20.118) என்று கூறப்படுகிறது. பௌதீக வாழ்க்கை என்பதற்குப் பொருள் தொடர்ந்து துக்கித்தல் என்பதாகும் ஆயினும் சிலசமயம் இடைவெளிகளில் தோன்றும் மகிழ்ச்சியை நாம் ஏற்றுக் கொள்கிறோம். சிலசமயம் நிந்திக்கப்பட்ட ஒருவன், தண்ணீரினுள் அமிழ்த்தப்பட்டு வெளியேற்றப்படுகிறான். உண்மையில் இது கூட தண்டனைதான் ஆயினும் அவன் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் சிறிது சுகத்தினை அனுபவிக்கிறான். பந்தப்பட்ட ஆத்மாவின் நிலை இதுவேயாகும். அதனால்தான் அனைத்துச் சாத்திரங்களும் ஒருவன் பக்தர்களுடனும், தெய்வீக மகான்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றன.


ஸாது - ஸங்க, ‘ஸாது - ஸங்கஸர்வ - ஸாஸ்த்ரே கய

லவ - மாத்ர ஸாது - ஸங்கே ஸர்வ - ஸித்தி ஹய

(சைச. மத்ய 22.54)


பக்தர்களுடன் கொள்ளும் ஒரு சிறிய தொடர்பினால் கூடப் பந்தப்ப்டட ஆத்மாவினால் துன்பம் நிறைந்த பௌதீக நிலையிலிருந்து வெளியேற முடியும். இக்கிருஷ்ணபக்தி இயக்கம் அதனால்தான் ஒவ்வொருவனும் தெய்வீகமகான்களுடன் தொடர்பு கொள்வதற்கான, முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றது. ஆகையினால் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்காகத் தாங்களே நிறைவுடைய சாதுக்களாக இருத்தல் வேண்டும். இதுவே சிறந்த மனிதநலச் சேவையாகும்.


 (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14.38 / பொருளுரை வழங்கியவர்

 ஶ்ரீல பிரபுபாதர்  )



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...