மன்னன் யயாதி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்னொரு காலத்தில் பாற்கடல் கடையப்பட்டு அமிர்தம் எடுக்கப்பட்டது. அமிர்த கலசத்தை கண்ட அசுரர்கள், அதை வலுக்கட்டாயமாக பிடிங்கி எடுத்துச் சென்றனர். பகவான் மோகினி ரூபம் எடுத்து அசுரர்களால் திருடி செல்லப்பட்ட அமிர்த கலசத்தை தந்திரமாக வாங்கி தேவர்களுக்கு வழங்கினார். இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த அசுரர்கள் தேவர்களிடையே யுத்தம் செய்தனர். போரில் பல பலசாலி அசுரர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி போரில் இறந்து போனான். அசுரகுரு சுக்கிராசாரியார் இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார்.அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ள, சுக்கிராசாரியாரும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி அசுரத்தலைவன் பலியை உயிர் பிழைக்கச்செய்து விட்டார். இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி மந்திரத்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக...