கோவர்தன பர்வதத்தின் சக்திகளும் மகிமைகளும் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒருமுறை, விஜயா என்ற பிராமணர், தன் முன்னோர்களுக்கும் சாதுக்களுக்கும் செய்யவேண்டிய காரியங்களை செய்வதற்காக, பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமான மதுராவிற்கு சென்றார். தான் வந்த வேலை முடிந்தவுடன், அங்கிருந்து புறப்படுகையில், கோவர்தன கிரியிலிருந்து ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு காடாக கடந்து ஒரு வழியாக வ்ரஜ பூமியை நீங்கியபோது, ஒரு ராட்சசன் தன் முன் வருவதை உணர்ந்தார். மூன்று தலைகள், மூன்று உடம்புகள், ஆறு கரங்கள், ஆறு கால்கள், பெரிய வாய் மற்றும் மூக்கு என்று, பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தான் அந்த ராட்சசன். அவனுடைய கரங்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன; அவனுடைய ஏழு முழங்கை நீல அளவுள்ள நாக்கு முன்னும் பின்னும் ஆடியது; அவனது கண்கள் சிவந்திருந்தன; அவனுடைய பற்கள் மிகவும் கோரமாக இருந்தது. பிராமணரை விழுங்குவதற்காக அவன் முன்னேறி வந்தான். பிராமணர் செய்வதறியாது, அவனை கோவர்தன கிரியின் கல்லை கொண்டு தாக்கினார். அந்த ராட்சசன் தன் உடலை விட்டான். அந்த உடலிலிருந்து, தீடீரென்று ஒரு அழகான ரூபம் தோன்றியது. ...