தமிழகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் மஹாபிரபுவின் பயணத்தை கூடியவரை வரிசைக்கிரமமாக வழங்க முயன்றுள்ளார்; அதே சமயத்தில், ஸ்ரீ சைதன்யரின் தீர்த்த யாத்திரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா திசைகளிலும் இருந்தது என்றும், சில இடங்களுக்கு அவர் இருமுறைகூட விஜயம் செய்தார் என்றும், தம்மால் ஒரு சில இடங்களின் பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடிகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, அவர் தமிழகம் முழுவதும் பயணித்தார் என்று கூறுவதே சாலச் சிறந்தது. ஆயினும், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள இடங்களும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. மஹாபிரபு தமது பயணத்தில் எண்ணிலடங்காத மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றினார், அவரால் மாற்றப்பட்டவர்கள் தத்தமது ஊர்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் மாற்றினர். சுருக்கமாகச் சொன்னால், ஸ்ரீ சைதன்யர் தமிழகத்தில் இருந்தபோது, தமிழகமெங்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனம் பர...