Skip to main content

Posts

Showing posts from August 27, 2021

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -13

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -13 இயற்கையும் அனுபவிப்பவனும் உணர்வும் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பன்னிரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், அருவ பிரம்மனை வழிபடுபவர்–இருவரில் யார் சிறந்தவர்? என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் பன்னிரண்டாம் அத்தியாயம் தொடங்கியது. தனது தனிப்பட்ட உருவத்தை வழிபடுவதே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தி, பரம்பொருளின் அருவத் தன்மையை வழிபடுவோரின் பாதை துன்பங்கள் நிறைந்தது என்பதையும் ஆணித்தரமாக கிருஷ்ணர் எடுத்துரைத்தார். மேலும், தனது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளோரை ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுவிக்கும் பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். தூய பக்தியில் நிலைபெற இயலாதோர் ஸாதன பக்தியைப் பயிற்சி செய்யலாம் என்றும், அதைச் செய்யவும் இயலாதோர் கர்மம், ஞானம், யோகம் போன்றவற்றில் ஈடுபடலாம் என்றும் கூறிய கிருஷ்ணர், தனது பக்தனின் உயரிய குணங்களை எடுத்துரைத்து பக்தனே தனக்கு பிரியமானவன் என்று நிலைநாட்டினார். பன்னிரண்டாம் அத்தியாயத்திற்கும் பதிமூன்றாம் அத்தியாயத்திற்கும் இடையிலான தொடர்பு தனது பக்தர்களைத் தானே விடுவிப்பதாக கி...

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -12

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -12 பக்தித் தொண்டு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினொன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம் கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றினால் பூரண தெளிவு பெற்றான். இருப்பினும், பிற்காலத்தில் வரக்கூடிய மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணர் பத்தாம் அத்தியாயத்தில் தமது பெருமைகளாகப் பட்டியலிட்டவை அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் நேரில் காண விருப்பம் தெரிவித்தான். அர்ஜுனனின் விருப்பத்தை ஏற்று, அவன் காண விரும்பியவை மட்டுமின்றி, வருங்காலத்தில் காண விரும்புபவற்றையும் தனது விஸ்வரூபத்தில் காட்டுகின்றேன் என்று கூறி, அவனுக்கு தெய்வீகக் கண்களை கொடுத்த பின்னர், கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். விஸ்வரூபத்தில் எண்ணற்ற கண்கள், கால்கள், கைகள் என அற்புதமான தரிசனத்தினை அர்ஜுனன் பெற்றான். பல்வேறு தேவர்களையும் உயிரினங் களையும் கண்டான். ஆச்சரியத்தில் மூழ்கித் தனது பிரார்த்தனையை முன்வைத்த அர்ஜுனன் படிப்படியாக பயம் கொண்டான். தான் காலம் என்றும் அனைவரையும் அழிக்க வந்திருப்பதாகவும் கிருஷ்ணர் விளக்கிய பின்னர், அவரது நான்கு கரங்களைக் கொண்ட நா...

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -11

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -11 விஸ்வரூபம் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பத்தாம் அத்தியாயத்தின் சுருக்கம் அர்ஜுனன் தனது நண்பன் என்பதால், கிருஷ்ணர் தன்னைப் பற்றிய விவரங்களை தாராளமாக எடுத்துரைத் தார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்–தேவர்கள், ரிஷிகள் என யாராலும் அவரது வைபவங்களை முழுமையாக அறிய இயலாது. ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளதோ, அவை அனைத்திற்கும் கிருஷ்ணரே மூலம் என்பதை அறிந்தோர் அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பக்தர்கள் தங்களுக்குள் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் தன்னை நோக்கி வருவதற்குத் தேவையான அறிவை கிருஷ்ணரே அவர்களுக்கு வழங்கி, அந்த ஞான ஒளியைக் கொண்டு அவர்களின் இதயத்திலுள்ள அறியாமை என்னும் இருளை அகற்றுகிறார். கிருஷ்ணரே எல்லாவற்றின் ஆதி மூலம் என்பதை அவரது திருவாயிலிருந்து கேட்ட அர்ஜுனன் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டான். நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற பலரும் கிருஷ்ணரை அவ்வாறே முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளதை அர்ஜுனன் மேற்கோள் காட்டினான். கிருஷ்ணர் கூறிய அனைத்தையும் முழுமையாக ஏற்ற அர்ஜுன...