Skip to main content

Posts

Showing posts with the label Sri Mayapur Dham /ஸ்ரீ மாயாபூர் தாம்

பகவான் ஜகந்நாதரின் அசாதாரணமான தோற்றத்தின் இரகசியம்

அருளியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஜகந்நாதரின் இந்த அசாதாரணமான தோற்றத்தின் இரகசிய காரணம் என்ன என்பது சிக்கி மகித்தி என்பவர் எழுதிய மஹாபாவா பிரகாஷா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பீராவில் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியில் வசித்த இடம்) ஸ்வரூப் தாமோதரும், ராமாநந்தாராயும் மகாபிரபுவிடம் ஜகந்நாதர் பலதேவர் மற்றும் தேவி சுபத்ராவின் அசாதாரணமான உருவத்தை பற்றி வினவியதற்கு பகவான் சைத்தன்யர் கீழ்கண்டவாறு விவரித்தார். ஒருமுறை பலராமரின் தாயாகிய ரோகிணி தேவி துவாரகைக்கு வருகை தந்தபொழுது பகவான் கிருஷ்ணரின் ராணிகள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். மேலும் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்திய திவ்ய லீலைகளை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் "தூங்கும் போது சில சமயம் பேசுவதை கேட்கிறேன். அவரது இனிய குரலில் அவரது நண்பர்கள் பெயராகிய ஸ்ரீதாமா, சுபாலா மற்றும் பசுக்களின் பெயர்களை அழைக்கிறார். சில சமயம் அவர் "ஓ லலிதா, விசாகா, ஓ ஸ்ரீ ராதே என்று அழைக்கிறார். மற்றொரு சமயம் அம்மா எனக்கு புதிய வெண்ணெயை ஊட்டி வ...