Skip to main content

Posts

Showing posts from January 11, 2025

பக்தி தொண்டு

 

பக்குவமான கிருஷ்ண உணர்வு

  சேதஸா ஸர்வ – கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத் – பர : பு த் தி – யோக ம் உபாஷ் ரித்ய மச் – சித்த : ஸததம் ப வ மொழிபெயர்ப்பு எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து , எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக . இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு . பொருளுரை :  கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் , உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை . அவன் ஒரு சேவகனைப் போன்று , பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும் . சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது . அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான் . உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன் , இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை . அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கை யுடன் நிறைவேற்றுகிறான் . அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான் , ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம் . இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் ...