ஶ்ரீ ஜெயதீர்த்தர் 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார். மத்வாச்சாரியார், தன் சிஷ்யர்களுக்கு த்வைத கொள்கைகளையும், ஸர்வ மூல க்ரந்தங்களையும் கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தபோது மாணவர்களான சிஷ்யர்கள் மட்டும் அல்லாமல் ஒர் எருதும் கேட்டுக்கொண்டிருக்கும். மத்வாச்சாரியார், திக்விஜயங்கள் மேற்கொள்ளும் போதும் அவரது நூல்களை அந்த எருதே சுமந்து கொண்டு செல்லும். இப்படி பதினெட்டு ஆண்டுகளாக மத்வாச்சாரியருக்கு ஸேவை செய்தது அந்த எருது, பிற்காலத்தில்" டீக்காராயர் " என்று புகழ் பெற்ற ஜெயதீர்த்தராக அவதாரம் எடுத்தார்., தன்னுடைய முன் ஜன்மத்தில் எருதாக மத்வாச்சாரியரின், ஸர்வ மூல க்ரந்தங்களை சுமந்து, அவரது வாயாலேயே கேட்டு, பின் அடுத்த பிறவியில் ஸ்ரீ ஜெய தீர்த்தராக, மத்வரின் ஸர்வ மூல க்ரந்தங்களை விளக்கவுரையுடன் எழுதி ...