Skip to main content

Posts

Showing posts from January 5, 2025

இறையுணர்வு கொண்ட பிரிவினர் எப்பொழுதும் மகிழ்ச்சியும், வெற்றியும் உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.

  அரசியல், அரசியல் தந்திரம், ஏமாற்றும் தன்மை, மற்றும் இரு பிரிவுகளுக்கு இடையிலான தனிநபர் அல்லது சமூக பேச்சு வார்த்தை ஆகியவை இவ்வுலகில் இருப்பதை நாம் காண்கிறோம். இவை உயர்கிரக அமைப்புக்களிலும் உள்ளன என்பது இச்சுலோகத்திலிருந்து தெளிவாகிறது. தேவர்கள் அமிர்தத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலி மகாராஜனிடம் சென்றனர். ஆனால், தேவர்கள் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளதால், அமிர்தம் உற்பத்தியானதும் அதை தேவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, தங்களது சுய நோக்கங்களுக்காக அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்றெண்ணிய அசுரர்கள் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மையில் தேவர்களுக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. தேவர்கள் முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவின் பக்தர்களாக இருந்தனர். ஆனால் அசுரர்களோ பகவான் விஷ்ணுவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதனால் பகவான் விஷ்ணு தேவர்களுக்குத் துணையாக இருந்தார். இதுவே இவர்களுக்கிடையிலுள்ள ஒரே வேறுபாடாகும். பிரபஞ்சம் முழுவதிலும் இரு பிரிவினர் உள்ளனர் விஷ்ணு குழுவினர், அல்லது இறையுணர்வு கொண்ட குழுவினர் ஒரு பிரிவும், நாஸ்திகர்கள் மற்ற பிரிவுமாவார். நாஸ்திக பிரிவினர் சந்தோஷம...

எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகும்

  பத்ம புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் தஸ்மாத் பாதரம் தேவி ததீயானாம் ஸமர்சனம் “எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகு ம் . பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விடச் சிறந்தது அவரது பக்தர்களான, வைஷ்ணவர்களை வழிபடுவதாகும்.” பௌதிக ஆசைகளில் பற்றுக் கொண்டவர்களால் வழிபடப்படும் தேவர்கள் பலர் உள்ளனர் (காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத - ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய - தேவதா:) மக்கள் பலவிதமான பௌதிக ஆசைகளால் சங்கடத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் வெவ்வேறு பலன்களை அடைவதற்காக சிவபெருமான், பிரம்ம தேவர், காளி, துர்கா, கணேஷர் மற்றும் சூரியன் ஆகியோரை வழிபடுகின்றனர். ஆயினும், பகவான் விஷ்ணுவை வழிபடுவதாலேயே ஒருவரால் இப்பலன்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் அடைந்து விட முடியும். பாகவதத்தில் (4.31.14) குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்: யதா தரோர் மூல - நிஷேசனேன த்ருப்யந்தி தத் - ஸ்கந்த - புஜோபசாகா: ப்ராணோபஹாராச் ச யதேந்ரியாணாம் ததைவ ஸர்வார்ஹணம் அச்யுதேஜ்யா “ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதாலேயே, அதன் அடிமரம், இலைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை ஒருவர் வ...