Skip to main content

Posts

Showing posts from February 11, 2021

மனு ( மனித குலத்தின் உண்மையான தந்தை)

  மனு வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மனு என்பவர் மனித குலத்தின் உண்மையான தந்தை ஆவார்.  இதன் காரணமாகவே மனிதகுலம் "மனுஷ்யா" என்று அழைக்கப்படுகிறது.  உலகத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான முறைக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மதேவர் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார்.  மனு என்பவர் பிரம்மதேவரின் மகனாவார்.  அதுபோலவே பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களில் உள்ள மன்னர்கள்,  அரசர்கள் யாவரும் மனுவின் பிரதிநிதிகளாவர்.  பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர், எவ்வாறு மனுக்கள் உன்னதமான அறிவை தமக்கு போதித்தவர்களிடமிருந்து நம்பிக்கையோடு பெற்றனர் என்பதையும், எவ்வாறு  அவர்கள் நம்பிக்கையோடு தமது சந்ததியினருக்குக் அதனை கற்றுக் கொடுத்தனர் என்பதையும் விளக்குகிறார். பிரபஞ்ச படைப்பின் முதல்  உயிர் வாழி, ஸ்வாயம்புவ மனு மற்றும் அவரது மனைவி சதரூபாவையும் உருவாக்கிய பிரம்ம தேவர் ஆவார். இங்கு காட்டப்பட்ட பிரம்மதேவர் மற்றும் மனு இடையிலான தந்தை மகன் உறவை அவர்கள் கையாளும் விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். த...