சரஸ்வதி நதியின் கரையோரத்திலுள்ள தனியிடத்தில் அமர்ந்த வியாஸ தேவர் மிக ஆழ்ந்து யோசிக்கலானார். பின் அவர் தனக்குள்ளேயே கூறிக்கொண்டார்... "நான் என்னுடைய ஆன்மீகக் கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகிறேன். பக்குவமான முறைகளில் வேதங்களையும், ஆன்மீக குருவையும் வணங்கி வருகிறேன். வேதத்தை நான்காகப் பிரித்துள்ளேன், எளிய மக்களும் புரிந்து பயன் பெறும் விதமாக மஹாபாரதத்தையும் எழுதியுள்ளேன். எனினும் என் மனம் முழுமையை உணரவில்லையே?" "ஏன் என்னுடைய இதயம் திருப்தியை உணரவில்லை?.. இவ்வாறு நேர்மையான அவரது சுய பரிசோதனை மூலமாக ஸ்ரீல வியாஸ தேவர் தன்னுடைய அதிருப்திக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். அவர் நினைத்தார், " பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகள் மற்றும் பக்தி அதாவது பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் அன்புத் தொண்டு, அதுவே அனைத்து உயிர்வாழிகளின் இயல்பான நிலை. அத்தகைய தூய பக்திப்பாதையே தூய பக்தர்களையும் , பகவானையும் திருப்திப்படுத்தும்." இவையெல்லாம் என்னுடைய சரிதங்களில் போதுமான அளவு நான் விவரிக்கவில்லை.. ஒருவேளை அதுதான காரணமாக இருக்குமோ? ஸ்ரீல வியாஸ தேவர் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக...