Skip to main content

Posts

Showing posts from April 25, 2024

வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள்

  நவீன விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றவர்கள் , இப்பூமி ஒன்றில் மட்டுமே விஞ்ஞான அறிவும் , புத்திசாலித் தனமும் நிறைந்த உயிர்கள் இருக்கின்றனவென்றும் பிற கோள்களில் இப்படிப்பட்ட உயிர்கள் ஏதும் இல்லை என்றும் பொதுக் கருத்துடையவர்களாக இருக்கின்றனர் . வேத இலக்கியங்கள் இம்மூடக் கூற்றினை மறுக்கின்றன . வேத ஞானம் படைத்தவர்கள் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள் தேவர்கள் , முனிவர்கள் , பித்ருக்கள் , கந்தர்வர்கள் . நாகர்கள் , கின்னரர்கள் , சாரணர்கள் , சித்தர்கள் , மற்றும் அப்ஸரர்கள் என்று இருக்கின்றார்கள் என்பதை அறிவர் . வேதங்கள் , இந்த பௌதீக வானத்தில் மட்டுமல்லாது ஆன்மீக வானத்திலும் பல்வேறு வகையான உயிர்கள் வாழ்கின்றன என்றும் தகவல்களைக் கூறுகின்றன . இங்குள்ள உயிர்கள் எல்லாம் ஒரே ஆன்மீகத் தன்மை உடையன . முழுமுதற் கடவுளிடமுள்ள அதே குணமுடையனவாகவும் இருந்த போதிலும் ஆத்மாவிற்கு நிலம் , நீர் , காற்று , தீ , வானம் , மனம் புத்தி மற்றும் ஆணவம் என்னும் எண்வகைப் பொருள்களினாலான தேகம் உ...

பரம இரகசியமான ஞானம்

பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள் . மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது . அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும் . ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு . அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும் . ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது . முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில் , யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும் . பல நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது . எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும் . ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும் . அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்...