Skip to main content

Posts

Showing posts from May 30, 2025

கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது.

  ஸ்த்ரியோ வைஸ்யாஸ் ததா சூத்ராஸ் தே ‘பி யாந்தி பராம் கதிம் என்று பகவத்கீதை (9.32) குறிப்பிடுகிறது. ஆன்மீக கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெண்கள் அவ்வளவு சக்தியுடையவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால் போதிய அதிர்ஷ்டசாலியான ஒரு பெண் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ள ஒரு கணவனைப் பெற்று, அவரது சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பாளாயின், கணவன் அடையும் அதே நன்மையை அவளும் அடைகிறாள். சபரி முனிவரின் செல்வாக்கினால் அவரது மனைவிகளும் ஆன்மீக உலகிற்குள் பிரவேசித்தனர் என்று இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், தங்கள் கணவரை விசுவாசத்துடன் பின்பற்றியதால், அவர்களாலும் அவருடன் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. இவ்வாறாக ஒரு பெண் தன் கணவனுக்கு விசுவாசத்துடன் சேவை செய்பவளாக இருக்க வேண்டும். கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது. ( ஸ்ரீமத் - பாகவதம்   9 .6 .55 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே...