Skip to main content

Posts

Showing posts from March 25, 2023

தந்தையிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

  தந்தையிடம் பக்தி 🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ராமர் தனது தந்தையிடம் கொண்டிருந்த பக்தியும் மிகமிக அற்புதமானது. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில் ஸ்ரீராமரது மனத்தில் எவ்வளவு உற்சாகமும், துணிவும், திடமான உறுதியும் இருந்தது என்ற விஷயம் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது! தாயான கைகேயியிடம் ஸ்ரீராமன் சொல்வதை வால்மீகி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.  அஹம் ஹி வசநாத்  ராஜ்ஞ: பதேயமபி பாவகே  பக்ஷயேயம் விஷம் தீஷ்ணம் பதேயமபி சார்ணவே | (வால்மீகி இராமாயணம் 2/18/28-29) ந ஹ்யதோ தர்மசரணம் கிஞ்சித ஸ்தி மஹத்தரம் யதா பிதரி ஸுஸ்ரூஷா தஸ்ய வா வசநக்ரியா (வால்மீகி இராமாயணம் 2/19/22) 'மன்னர் சொன்னால் நான் நெருப்பில் குதிப்பேன். கொடிய நஞ்சையும் உண்பேன். கடலிலும் விழுவேன். ஏனென்றால் தந்தைக்குப் பணிவிடை செய்வதையும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதையும் விடப் பெரிய தர்மம் உலகில் வேறு ஒன்றுமில்லை' என மொழிகிறார். அங்கே இதேபோன்ற மொழிகள் பல காணப்படுகின்றன. பிறகு அன்னை கௌசல்யா தேவியிடம் அவர் நாஸ்தி பக்தி: பிதுர்வாக்யம் ஸமதிக்ரமிதும் மம  ப்ரஸாதயே த்வாம் ஸிரஸா கந்துமிச்சாம்யஹம் வநம் (...

தாயிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

தாயிடம் பக்தி 🍁🍁🍁🍁 இராமபிரானுக்குத் தம்முடைய தாயிடம் இருந்த பக்தி சிறந்த ஆதர்சனமானது, (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது). அதை முழுவதும் விவரிப்பது என்பது இயலாது. எனவே இங்கே சுருக்கமாக மட்டுமே எழுதப்படுகிறது. அன்னை கைகேயி தம்மிடம் தயையில்லாமல் நடந்துகொண்ட போதிலும், அவரிடத்தில் ஸ்ரீராமன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பக்தியும். மரியாதையும் நிரம்பியதாக இருந்தது. அன்னை கௌசல்யாவின் அரண்மனையிலிருந்து திரும்பி வருகின்றபோது அவர் லக்ஷ்மணனிடம், பின்வருமாறு சொல்கிறார்; யஸ்யா மதபிஷேகார்தே மாநஸம் பரிதப்யதே மாதா ந: ஸா யதா ந ஸ்யாத் ஸவிங்கா ததா குரு  தஸ்யா: ஸங்காமயம் துகம் முஹூர்தமபி நோத்ஸஹே  மநஸி ப்ரதிஸஞ்ஜாதம் ஸௌமித்ரேக்ஷஹமுபேக்ஷிதும் ந புத்தி பூர்வம் நாபுத்தம் ஸ்மராமீஹ கதாசந மாத்ரூணாம் வா பிதுர்வாஹம் க்ருதமல்பம் சவிப்ரியம் (வால்மீகி இராமாயணம் 2/22/6-8) "லக்ஷ்மணா! என்னுடைய முடிசூடுதலின் காரணமாக யாருடைய மனம் கொதிக்கின்றதோ, அந்த என் தாய்க்கு என் மேல் ஒரு சந்தேகமும் ஏற்படாதபடி நீ நடந்து கொள். சந்தேகத்தின் காரணமாக அவர் உள்ளத்தில் எழுகின்ற துக்கத்தை நான் ஒரு முகூர்த்தம் கூடத் தாளமுடியாது...