முன்னுரை: இந்த ஶ்லோகம், நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறியாமல், ஜட உலகில் அதைத் தேடும் மனிதனின் நிலையை எளிமையாக விளக்குகிறது. எப்படி ஒரு மான் கானல் நீரை உண்மை நீராக எண்ணி ஓடுகிறது, அதுபோல் நாமும் உண்மையான மகிழ்ச்சியைத் தவறான இடங்களில் தேடுகிறோம். உண்மையான மகிழ்ச்சி ஜலம் தத்-உத்பவைஸ் சன்னம் ஹித்வாக்ஞோ ஜல-காம்யயா ம்ருகத்ருஷ்ணாம் உபாதாவேத் ததான்யத்ரார்த்த-த்ருக் ஸ்வத: ஜலம்-நீர்; தத்-உத்பவை:-அந்த நீரிலிருந்து வளர்ந்த புல்லால்; சன்னம்-மூடப்பட்டுள்ள; ஹித்வா-விட்டுவிட்டு; அக்ஞ:-அறிவில்லாத ஒரு மிருகம்; ஜல-காம்யயா-நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்-கானல் நீரை; உபாதாவேத்-தேடிச் செல்கிறது; ததா-அதுபோலவே; அன்யத்ர-வேறெங்கோ; அர்த்த-த்ருக்-தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:-தனக்குள். மொழிபெயர்ப்பு அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். பொருளுரை அறிவ...