Skip to main content

Posts

Showing posts with the label Glories of Holy Name / ஹரி நாமத்தின் மகிமை (story)

மிக சிறந்த வரமும் மிக உயர்ந்த செல்வமும்

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையில் வாடிய ஒரு அந்தணர், தனது துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற வேண்டி சிவபெருமானைக் குறித்துத் தவம் இருந்தார். சிவபெருமான் 'மிதுஷ்டமா' (வாரி வழங்குபவர்களில் சிறந்தவர்) என்று அழைக்கப்படுபவர். உலகாயத ஆசைகள் கொண்ட பலர் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள அவரையே அணுகுவர். ஆனால், இந்த அந்தணரின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அவருக்கு வெறும் அழியும் செல்வத்தைத் தராமல், அவரது ஆன்மீக வாழ்விற்குத் தேவையான 'உயரிய அருட்பேற்றினை' வழங்கத் திருவுளம் கொண்டார். சிவபெருமான் அந்த அந்தணரிடம், "பிருந்தாவனத்தில் வசிக்கும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நெருங்கிய சீடரான சநாதன கோஸ்வாமியைச் சென்று பார். அவரே உனக்கு உலகிலேயே மிகச்சிறந்த செல்வத்தை வழங்க வல்லவர்" என்று வழிகாட்டினார். சநாதன கோஸ்வாமியும் குப்பையில் கிடந்த செல்வமும் சிவபெருமானின் அறிவுரைப்படி அந்த அந்தணர் பிருந்தாவனம் சென்று சநாதன கோஸ்வாமியைச் சந்தித்தார். எளிமையே உருவான ஸ்ரீல  சநாதன  கோஸ்வாமி, யமுனை நதிக்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து எப்போதும் ஹரி  நாமத்தை ஓதிக் கொண்டிருந்தார். அந்த...

“நரகத்திலிருந்து வைகுண்டம் – ராமநாமத்தின் மகிமை”

     சீதாதேவியின் தந்தையான ஜனக மஹாராஜா , பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் மிகுந்த பக்தரும் ஆவார் . ஸ்ரீமத் பகவதம் - இல் அவர் தர்மத்தை நிலைநாட்டிய பன்னிரண்டு மகாஜனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார் . அவருடைய கருணையும் , பக்தியும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சம்பவம் பத்ம புராணத்தில் ( பாதாளகண்டம் ) விவரிக்கப்படுகிறது . ஒருநாள் , அனந்த சேஷன் ஜனக மஹாராஜா நரகத்தில் சென்ற நிகழ்வைப் பற்றி கூறினார் . தெய் வீக  வைகுண்ட  பயணம் இடைவிடாத யோக சாதனையின் பின் ஜனக மஹாராஜா தனது உடலைத் துறந்தார் . அப்பொழுது மணி ஒலிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெய்வீக விமானம் இறங்கி வந்தது . அவர் அதில் ஏறிச் சென்றார் . அந்த விமானம் யமராஜாவின் உலகத்திற்கருகே சென்றபோது , அங்குள்ள பாவிகள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆச்சரியம் என்னவெனில் – ஜனக மஹாராஜாவைத் தொட்ட காற்று அந்தப் பாவிகளை எட்டியவுடன் , அவர்கள் துன்பம் மறந்து பேரின்பத்தை அனுபவித்தனர் . அந்தப் பாவிகள் கண்ணீர் மல்க , " அரசே ! எங்களை விட்டுச் செல்ல...