Skip to main content

Posts

Showing posts from January 4, 2021

ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்

 ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஶ்ரீ ராதா ரமணர் கோவில், ஶ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமியினால்  தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் பிருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராவார். ஸ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவின் போதனைகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வந்தார். இவர் வழிபட்ட சாளகிராமத்திலிருந்து தோன்றிய ஶ்ரீ ராதா ரமணர்  விக்கிரகமானது மிகவும் அழகாகவும், மந்தகாசப் புன்னகையுடன் கூடியதுமாகும். 500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தாவனத்தில் சாளகிராமத்திலிருந்து சுயம்புவாக ஶ்ரீல கோப்பாலபட்ட கோஸ்வாமியின் வேண்டுதலுக்கிணங்கி ஶ்ரீ ராதா ரமணன் விக்ரகமாக மாறினார். இங்கு மிக உயர்ந்த தரத்திலான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.   ஸ்ரீ ராதா ரமணன் விக்ரஹம் 30 செ.மீ  உயரமுள்ளது. கோபால பட்ட கோஸ்வாமியின் பிற சாள கிராமங்களும் இங்கு ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஸ்ரீ ராதா ரமணரின்  விக்ரஹம் பிருந்தாவன கோஸ்வாமிகளின் விக்ரஹங்களில் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் அர்சா விக்ரகம்   இல்லை. ஸ்ரீமதி ராதாராணியின் பெயரே வழிபாட்டில் உள்ளது. ஏனென...

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுள் புருஷோத்தமர் அதாவது எல்லா உயிர்களிலும் மிகச் சிறந்தவர் என்று அறியப்படுகிறார். எல்லா உயிர்களைப் போலவே இவரும் இருப்பார். எனினும் இவரே அவைகளில் எல்லாம் மேம்பட்டவராகவும் தலைவராகவும் விளங்குகிறார். இவரே நித்தியமானவற்றுள் எல்லாம் உயர்ந்தவராகவும், உயிர்களுக்கெல்லாம் சிறந்தவராகவும், மற்றும் முழுதுமானப் பூரணர் ஆகவும் விளங்குகின்றார். மற்ற உயிர்களின் செயல்களில் குறுக்கிட்டு இவர் அடைகின்ற பலன் ஏதும் இல்லை எனினும் அவர் நெறிமுறைப்படுத்திக் காக்கின்றவர். ஆதலினால் அவைகளை உயர்நிலைக்கு ஏற்றி அவை மகிழ்ச்சியுறமாறுச் செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஒரு தந்தை கூட தன் மக்கள் எல்லோரும் தன் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து மகிழ்ச்சியடைவதையே விரும்புகிறான். அது போல் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணர் உயிர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனவா என்று பார்க்கும் உரிமை படைத்தவராக இருக்கின்றார். இப்பௌதீக உலகில் மகிழ்ச்சியுடனிருப்பது நடவாத காரியம். தந்தையும் தனயர்களும் நித்தியமானவர்கள், ஆனால் ஓர் உயிர் அறிவு, ஆனந்தம் என்னும் நித்திய வாழ்வு நிலைக்கு உயராவிட்டால்...

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 
 
 
 
 

“உண்மையில் யார் காரணம் ?”

  உண்மையில் யார் காரணம் ? மஹாபாரதம் / அனுஷாஸன-பர்வம், / அத்தியாயம் ஒன்று வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 மாஹாபாரத போரில் பெரும் உயிர்சேதத்திற்கு தானே காரணம் என்று மனம்வருந்திய  யுதிஷ்டிர மஹாராஜரின் கேள்விகளுக்கு , பீஷ்மர்  பிதாமகர் இங்கே ஒரு சிறிய கதையின் மூலக பதிலளிக்கிறார்:  “நீ கடவுளையும், கர்மாவையும், காலத்தையும் நம்பியிருக்கும்போது, எதற்காக நீ உன்னையே காரணகர்த்தாவாக நினைக்கின்றாய்? இது தொடர்பான கதை ஒன்றில் ம்ருத்யு (மரண புருஷர்), காலம் (கால புருஷர்), புத்திசாலி பெண்மணியான கௌதமி, வேடன் மற்றும் ஒரு பாம்பு, இவர்களிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறுகிறேன் கேள்” என்றார்.   ஒருகாலத்தில் கௌதமி என்ற ஒரு மூதாட்டி இருந்தாள், அவள் பொறுமை மற்றும் மனஅமைதியின் சிகரமாக திகழ்ந்தாள். ஒருநாள் தனது மகன் பாம்பு கடித்து இறந்திருப்பதைக் கண்டாள். அர்ஜுனகா என்ற கோபக்கார வேடன் பாம்பை கயிற்றினால் கட்டி எடுத்துவந்து கௌதமியிடம் காண்பித்தான். அவன் அவளிடம், “மதிப்பிற்குரிய பெண்மணியே, இந்த கொடும் நாகம் தான் உனது மகனை கொன்றுள்ளது. இந்த பாவியை எவ்வாறு அழிப்பது என்று உடன...

பரசுராமர் அவதாரம்

 பரசுராமர் அவதாரம்  வழங்கியவர் :-  ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்னொரு காலத்தில், ஜமதக்னி என்னும் முனிவர், வனத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி கொண்டவர். அவருக்கு ஏழு குழந்தைகள்; பரசுராமர் முதல் மகன். மேலும் அவரிடம், கேட்ட வரத்தை அளிக்கும் காமதேனு என்ற அற்புத பசுவும் இருந்தது. இருப்பினும், பேராசை இல்லாமல், வனத்தில் சிறிய குடிலிலேயே வாழ்ந்து வந்தார்.  ஒரு நாள் பரசுராமர் வெளியே சென்றிருந்த சமயம், கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் தன் படை வீரர்களோடு அங்கு வந்தான். ஜமதக்னி முனிவர், அரசனையும், அவனது வீரர்களையும், மந்திரிகளையும், வாகனங்களையும் நன்கு வரவேற்று உபசரித்தார். விரும்பியதையெல்லாம் அளிக்கக் கூடிய ஒரு காமதேனு பசுவை அவர் வைத்திருந்ததால், இவ்விருந்தினர்களை உபசரிப்பதற்குத் தேவையானதை எல்லாம் அவர் கொடுத்தார். ஜமதக்னி, காமதேனுவின் உருவில் ஓர் இரத்தினத்தை வைத்திருந்ததால், அவர் தன்னைவிட சக்திவாய்ந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்ததாக கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்தான். எனவே அவனும், அவனது ஆட்களான ஹேஹயர்களும் ஜமதக்னியின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்னி...