Skip to main content

Posts

Showing posts from May 25, 2025

பக்தர்கள் சங்கத்தின்-முக்கியத்துவம்

  பதம் 25 ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ பவந்தி ஹ்ருத் கர்ணரஸாயனா : கதா : தஜ் ஜோஷணாத் ஆஸூ அபவர்க வர்த்மனி ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி மொழிபெயர்ப்பு தூய பக்தர்களின் தொடர்பில் , பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும் . அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார் , அதன் பின்னர் , அவர் விடுதலையடைகிறார் , அவர் கவனம் நிலைபெறுகிறது . பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன . பொருளுரை கிருஷ்ண உணர்விலும் பக்தித் தொண்டிலும் முன்னேறுவதன் முறை இங்கு வர்ணிக்கப்படுகிறது . முதல் கருத்து என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மற்றும் பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்களின் தொடர்பை விரும்புதல் வேண்டும் . அம்மாதிரித் தொடர்பு இன்றி ஒருவர் முன்னேற்றம் அடைய இயலாது என்பதாகும் . புத்தக அறிவு அல்லது படிப்பு இவற்றால் மட்டும் ஒருவர் போற்றத்தக்க வகையில் முன்னேற்றம்...