Skip to main content

Posts

Showing posts with the label Pandaripuram / பண்டரிபுரம் (HPA)

பண்டரிபுரம்

இலட்சக்கணக்கான பக்தர்களின் அன்பிற்கு பிரியமான விட்டலரின் பூமிக்கு ஒரு பயணம் வழங்கியவர்: தவத்திரு. லோகநாத ஸ்வாமி பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார். அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர், துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல, மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார். அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும், சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால், இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது. விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனி...