Skip to main content

Posts

Showing posts from September 29, 2023

பக்தி தொண்டின் மகிமை

  பகவானுக்குச் செய்யும் திவ்யமான தொண்டு பௌதிகமானதல்ல . பக்தனின் தொண்டு செய்யும் மனப்பான்மை படிப்படியாக வளர்ச்சியடைகிறதே தவிர , ஒருபோதும தளர்ச்சியடைவதில்லை . பொதுவாக முதுமையடைந்த ஒருவர் பௌதிக சேவையிலிருந்து ஒய்வுபெற அனுமதிக்கப்படுகிறார் . ஆனால் உன்னதமான பகவத் தொண்டில் ஒய்வு பெறுவதற்கு சிறிதும் இடமில்லை மாறாக , வயது முதிர முதிர தொண்டு செய்யும் மனப்பானமை அதிகரித்துக் கொண்டே போகிறது . பகவானின் உன்னதமான தொண்டில் சலிப்பே ஏற்படுவதில்லை என்பதால் , அதில் ஒய்வுபெறுவதற்கும் இடமில்லை . தேகத்தால் பௌதிக சேவை செய்து களைப்படைந்த ஒரு மனிதன் , ஒய்வு பெற அனுமதிக்கப்படுகிறான் . ஆனால் உன்னத தொண்டில் களைப்பே ஏள்படுவதில்லை . ஏனெனில் அது ஆன்மீகத் தொண்டாகும் , உடல் மட்டத்தில் உள்ளதல்ல . உடல் மட்டத்திலுள்ள செயல் வயது முதிர்ச்சியினால் படிப்படியாக நலிவடைந்துவிடுகிறது . ஆனால் ஆத்மா முதுமையடைவதேயில்லை என்பதால் , ஆன்மீகப் படித்தரத்திலுள்ள சேவைகள் களைப்பை ஏற்படுத்துவதில்லை . உத்தவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை . ஆன...