Skip to main content

Posts

Showing posts from January 19, 2022

அசிந்த்ய-பேதாபேத தத்துவம்

  ஏஷ நித்யோ ‘வ்யய: ஸூக்ஷ்ம ஏஷ ஸர்வாஸ்ரய: ஸ்வத்ருக் ஆத்மமாயா - குணைர் விஸ்வம் ஆத்மானம் ஸ்ருஜதே ப்ரபு: மொழிபெயர்ப்பு உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான். பொருளுரை இச்சுலோகத்தில், அசிந்த்ய-பேதாபேத தத்துவம், அதாவது, “ஒரேசமயத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்ட தத்துவம்” விவரிக்கப்படுகிறது. ஜீவராசி பரமபுருஷரைப்போல் நித்தியமானவன் (நித்ய). ஆனால் வேறுபாடு என்னவெனில், பரமபுருஷர் அனைவரிலும் பெரியவராவார். அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ ஒருவருமில்லை. ஆனால் ஜீவராசியோ, மிகமிகச் சிறியவனாவான் (சூக்ஷ்ம). ஜீவராசியின் பரிமாணம், தலைமுடியின் நுனியின் பத்தா...