Skip to main content

Posts

Showing posts from April 7, 2021

ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா?

ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா?  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் பக்தி-ஸந்தர்ப, நூலில், ஸ்கந்த, புராணத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை, சகோதர மற்றும் ஆன்மீக குருவைக் கொலை செய்தவனாகிறான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால்கூட வீழ்ச்சியடைகிறான் என்றும் அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்கள் பருப்புகள் உட்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்குச் சமைக்கப்படுகின்றன, ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருளையும் வைஷ்ணவன் ஏற்பதில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மஹா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப்படு...

பாபமோசனி ஏகாதசி

ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். கிருஷ்ண பகவானே, தாங்கள் ஏற்கனவே ஆமலக்கி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கூறினீர்கள். பங்குனி மாதத்தேய்பிறையில் (மார்ச்/ஏப்ரல்) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி இப்பொழுது எனக்கு விளக்கி கூறுங்கள். இந்த ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையையும் அதனால் அடையும் பலனையும் விளக்கமாக கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே. இந்த ஏகாதசியின் பெயர் பாபமோச்சனி ஏகாதசி இதன் பெருமைகளைக் கூறுகிறேன் கேள். பழங்காலத்தில் ஒரு முறை இந்த ஏகாதசியின் பெருமைகள் லோமஸ முனிவரால் மான்தாதா மன்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஏகாதசி பங்குனி (மார்ச்/ஏப்ரல்) மாதத் தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அகற்றி, வாழ்க்கையின் நரக நிலை அழித்து, அஷ்ட சித்திகளையும் கொடுக்கிறது. லோமஸ முனிவர் கூறினார். பண்டை காலத்தில் தேவர்களின் பொருளாளரான குபேரன், சைத்ரரதா என்ற ஒரு அழகான வனத்தை கொண்டிருந்தார். மலர்களால் நிறைந்திருந்த அவ்வனம், ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது. அவ்வனத்தில் கந்தவர்களும...