பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ரகசியம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁 பகவானுடைய பக்தர்கள் எப்போதும் அடுத்தவர்களிடம் அன்போடும் கருணையோடும் இருப்பார்கள்; உயிர்வாழிகள் துன்பப்படுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் மனிதர்கள், இந்த பௌதிக உலகம், ஒரு நரகம் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த உலகத்தில் நாம் அகப்பட்டுள்ளோம் என்பதை மறந்து, இந்த உலக சுகங்களை அனுபவிக்க முயல்கிறார்கள். வலியை இன்பமாக கருதுகிறார்கள். இந்த உலகத்தை விட்டு ஆன்மீக உலகை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். இத்தகைய மக்களை பார்க்கும்போது, அவர்களை இந்த நரக வாழ்விலிருந்து விடுவிக்கக்கூடிய வழியை பக்தர்கள் காட்டுகின்றனர். அவ்வகையில் பக்தர்களுள் சிறந்தவரான நாரத முனிவர், கலியுக மக்களின் நிலைமை கண்டு மிகவும் வேதனையடைந்தார். ஆகையால் அவர்களுக்கு கருணை காட்டவேண்டும் என்று எண்ணினார். முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே, இந்த மக்களை விடுவிக்க வல்லவர் என்று முடிவு செய்தார் நாரதர். கருணை உள்ளம் வாய்ந்த நாரதர், பகவ...