Skip to main content

Posts

Showing posts from June 18, 2021

அர்சா-விக்ரஹ அவதாரம்

  பக்தி யோகி, கிருஷ்ணரது விக்ரஹத்தினை வழிபாட்டிற்குரியதாக ஏற்கிறான், அதன் மூலம், உடல் சார்ந்த எண்ணங்களை மனதில் தாங்கியுள்ள மனிதனும் ஆன்மீகத்தில் ஈடுபட முடியும். பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஸகுண வழிபாடு (பரமனை குணங்களுடன் வழிபடுதல்), நிர்குண வழிபாடு (குணங்களற்ற பரமனை வழிபடுதல்) ஆகிய இரண்டிற்குமான ஆதாரங்கள் வேத இலக்கியங்களில் உள்ளன. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும். பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே ...

பயம்

  ஆபன்ன: ஸ்ம்ஸ்ருதிம் கோராம்யன்-நாம விவசோ க்ருணன் தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம் மொழிபெயர்ப்பு பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன. பொருளுரை  பரம புருஷ பகவானாகிய வாசுதேவன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் பரம ஆளுநராவார். பகவானின் கடுங்கோபத்திற்கு அஞ்சாதவர் ஒருவரும் படைப்பில் இல்லை. மாபெரும் அசுரர்களான இராவணன், ஹிரண்யகசிபு மற்றும் கம்ஸனைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஜீவராசிகள் அனைவரும் பரம புருஷனால் கொல்லப்பட்டனர். மேலும் சர்வ வல்லமை பொருந்தியவரான வாசுதேவன், தமது சுய சொரூபத்தின் சக்திகளையெல்லாம் அவரது நாமத்தில் பொருத்தியுள்ளார். அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருக்குள்ளேய அடங்கியுள்ளன. கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்டதும் பயமே உருவாக உள்ளதும், அஞ்சுகிறது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கிருஷ்ணா என்ற நாமத்திற்கும், கிர...

உலகியல் துன்பத்திலிருந்து மீளுதல்

பகவத்கீதையில் பகவான், ஒருவன் பிற எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு தம்மையே சரணடைய வேண்டும் என்று கூறுகிறார் அதில் சரண்புகுந்த ஆத்மாக்களை அவர் எல்லாவிதமான பாவச் செயல்களில் இருந்தும் காத்தருள்வார் என்று கூறுகிறார். ஶ்ரீல ரூபகோஸ்வாமி, அவர்கள் பாவச் செயல்களினால் உண்டாகும் துன்பங்களுக்கு, அப்பாவங்களும், முற்பிறப்பில் செயத பாவங்களுமே காரணம் என்று கூறுகிறார். பொதுவாக ஒருவன் அறியாமையினாலேயே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான் அதனால் பாவங்களில் இருந்து தப்புவதற்கு அறியாமை ஒரு பரிகாரம் ஆகிவிட்டது. பாவச் செயல்கள் இரு வகைப்படும் அவை முதிர்ந்த பாவச்செயல்கள், மற்றும் முதிராத பாவச் செயல்கள் . எந்தப் பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்து கொண்டிருக்கிறோமோ அவை முதிர்ந்த பாவச்செயலாகும். நம்மிடம் சேர்ந்திருக்கும் பாவச் செயல்களின் காரணமாக நாம் இன்னும் துன்பம் அனுபவிக்க வில்லை என்றால் அவை முதிராத பாவச்செயலாகும். இதற்கு உதாரணமாக பல குற்றங்களைச் செய்த ஒருவன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதை கூறலாம். இப்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சிறைவாசம் அவனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது ஆகையால் நமது ...