பீஷ்ம பஞ்சகம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும். பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார். பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள் அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில் ஆன்மிக பலன்களடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும். விரத முறைகள் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு பக்தருக்கு சாதிக்கும் என்றால் பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ப்ரீத்தி படுத்த சில பட்சணம் பதார்த்தங்கள் தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் இது நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது. 🍁🍁🍁🍁🍁🍁🍁 முதல் நிலை ?...