Skip to main content

Posts

Showing posts from October 22, 2023

பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது. அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும்.

  பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது . அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும் . நாம் விரும்பியபோதெல்லாம் சூரியனை உதிக்கும்படி நாம் உத்தரவிட முடியாது . அதைப் போலவே , பகவானை நம்முன் தோன்றும்படி நாம் உத்தரவிட முடியாது . சூரியன் அதன் முறைப்படி உதயமாகிறது ; அதுபோலவேதான் பகவானும் அவரது தனிப்பெரும் கருணையினால் காட்சியளிக்க ஒப்புக் கொள்கிறார் . எனவே ஒருவர் பகவானின் பக்தித் தொண்டில் தனக்கென நியமிக்கப்பட்டுள்ள கடமையைச் செய்துகொண்டு , அத்தகைய நல்ல தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டும் .. பகவான் ஒருவருக்கும் கடமைப்பட்டவரல்ல . அவரை கலப்பற்ற தூய பக்தியினால் சுலபமாகக் கட்டிவிட முடியும் . ஆனால் பௌதிக புலன்களால் அவரைக் கண்டறிய முடியாது . ஒருவர் பக்தித் தொண்டில் உண்மையான முயற்சியை மேற்கொண்டு , பகவானின் கருணையை முழுமையாக நம்பியிருக்கும்பொழுது , அதனால் திருப்தியடையும் பகவான் தம்மை காட்டிக்கொடுக்க விரும்புவாரானால் , அப்போது அவரை நம்மால் காணமுடியும் . ஶ்ரீமத் பாகவதம் 1 .6.19 / பொருளுரை 🍁🍁🍁🍁?...