ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா? வழங்கியவர்கள்: ஸ்ரீ கிரிதாரி தாஸ், ஜீவன கௌரஹரி தாஸ் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சிலர் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வேறு சிலர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் வாதங்கள் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் இந்த ஞானவாள் பகுதியில், இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். சிவபெருமானை உணர்வது எளிதல்ல கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை பல்வேறு சாஸ்திரங்களைக் கொண்டு பகவத் தரிசனத்தில் பலமுறை விளக்கியிருப்பதால், இங்கே சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் இருவரும் ஒருவரா என்பதை அறிவதிலும் கவனம் செலுத்தலாம். சிவபெருமானின் நி...