Skip to main content

Posts

Showing posts from July 5, 2021

முரண்பாடான சம்பவங்களும் யுதிஷ்டிரரின் விளக்கமும்

அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார். அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒ...