தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால : ப்ரத்யுபஸ்தித : யோ யோகினஸ் சந்த - ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது . இது , தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும் . பொருளுரை பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி , பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு , அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர் . பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது : தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் , அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் , சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது , அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து , ஆன்மீக வானத்தை அடைகின்றனர் . இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது . பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் . விரும்பிய நேரத்தில் உடல...