Skip to main content

Posts

Showing posts from December 29, 2024

உள்ளத்தூய்மை மற்றும் பிராயச்சித்தம்

நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே மன: புனர் தாவதி சேத் அஸத் - பதே தத் கர்ம - நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர் குணானுவாத: கலு ஸத்வ - பாவன:  மொழிபெயர்ப்பு சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பௌதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பௌதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது. பொருளுரை இச்சுலோகத்திலுள்ள கூற்றுகள், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) ஏற்கனவே பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளன: ஸ்ருண்வதாம் ஸ்வ கதா: க்ருஷ்ண: புண்ய ஸ்ரவண கீர்தன: ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்  “எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், ...