Skip to main content

Posts

Showing posts from February 17, 2022

சிறுவனின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்ட குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர். முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது கோவிலில் பூஜைகள தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார். அவனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து , கண்ணா, சாப்பிடு” என்று கூறினான் கண்ணன் அசையவில்லை உடனே அவன் வெறும் சாதத்தை - எவ்வாறு கண்ணன் சாப்பிடுவார் என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான் தயிரை சாதத்தில் கலக்கி. உப்புமாங்காயை வைத்தான் அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான் சாதம் அப்படியே இருந்தது. என்னுடைய அப்பா வந்தால் உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார். சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான் க...