பஞ்ச-தத்துவ வழிபாடு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரை அவருடைய முக்கிய சகாக்களான ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ கதாதர பண்டிதர், ஸ்ரீவாஸ தாகூர் மற்றும் இதர பக்தர்களுடன் இணைந்து பஞ்ச-தத்துவமாக (ஐந்து தத்துவங்களாக) வழிபடுகின்றனர். இந்த பஞ்ச-தத்துவ வழிபாடு கலி யுகத்திற்கு மிகவும் உகந்ததாகும். இது குறித்து ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து சில மேற்கோள்கள் இங்கே பகவத் தரிசன வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது. அபராதங்களைப் போக்கும் பஞ்ச தத்துவ வழிபாடு 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போதும் தனது முக்கிய அம்சமான ஸ்ரீ நித்யானந்த பிரபு, தனது அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, தனது அந்தரங்க சக்தியான ஸ்ரீ கதாதர பிரபு, தனது நடுத்தர சக்தியான ஸ்ரீவாஸ பிரபு ஆகியோரால் சூழப்பட்டுள்ளார். அவர்களின் மத்தியில் அவர் பரம புருஷ பகவானாக உள்ளார். ஸ்ரீ சைதன்ய மஹாபி...