பிரம்மச்சாரியத்தின் கொள்கை மனத்துறவு. இரண்டு விதமான பிரம்ச்சாரிகள் உள்ளனர். ஒருவர் நைஷ்டிக பிரம்மச்சாரி எனப்படுபவர், அதாவது தன் வாழ்நாள் முழுவதும் துறவு மேற்கொள்ள உறுதி எடுப்பவர். மற்றொருவர் உபகுர்வாண பிரம்மச்சாரி என்பவர். ஒரு குறிப்பிட்ட வயது வரை துறவுகொள்ளச் சபதம் எடுப்பவர். எடுத்துக்காட்டாக, அவர் இருபத்து ஐந்து வயது வரை துறவு மேற்கொள்ளச் சபதம் எடுக்கலாம்; பின்னர், அவரின் ஆன்மீகக் குருவின் அனுமதியுடன் திருமண வாழ்வினை மேற்கொள்கிறார். பிரம்மச்சாரியம் என்பது மாணவப் பருவ வாழ்வு என்பதோடு, புனித ஒழுங்குமுறையான வாழ்வின் தொடக்கம் ஆகும். பிரம்மச்சாரியத்தின் கொள்கை மனத்துறவு. குடும்பத் தலைவர் மட்டுமே புலன் திருப்தி அல்லது பாலுணர்வில் ஈடுபட முடியும்; ஶ்ரீமத் பாகவதம் 3.22.14 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். சுத்த ...