Skip to main content

Posts

Showing posts from June 19, 2022

புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள்

புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன்னொரு காலத்தில் புண்ணிய ஸ்தலமான காஞ்சியில் ஒரு பிரபலமான பட்டுப்படவை வியாபாரி (ஸாதிகா வியாபாரி) ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று (பஞ்சரம்) விற்பனைக்ககாக வைத்திருப்பதைக் கண்டார். அது மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமானதாகவும் விளங்கியது. வியாபாரி அதனை மிகவும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வாங்கி வந்தார். கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள அனைவரும், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கிளி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அது, "கடந்த முறை ஒரு வியாபாரி என்னைப் பிடித்தபோது மிகவும் சிரமப்பட்டுத்தான் தப்பித்தேன். இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருந்தது. பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும்...