Skip to main content

Posts

Showing posts from February 25, 2023

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூர்

 ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூர் 🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ சைதன்ய பாகவதத்தை இயற்றிய ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரர் மோதாத்ரும தத்தில் தீவீபத்தில் பிறந்தார். வேதவியாசரின் இந்த அவதாரமாகிய இவர் ஸ்ரீ நித்தியானந்த  பிரபுவின் சீடராவார். ஸ்ரீ கேசவ பாரதியின் வம்சாவளியைச் சேர்ந்த கோபிநாத  பிரம்மச்சாரி உள்ளிட்ட பல சீடர்கள் இருந்தனர். ஸ்ரீவாச பண்டிதரின் தங்கை மகளான நாராயணீ தேவியே ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரரின் தாயாவார். இவர் நான்கு வயது இருந்தபோது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கைகளிலிருந்து அவருடைய உத்திஸ்டையை பெற்றார். பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது அம்பிகா என்ற பெண் தன் பாலை அவருக்கு உண்பித்தார். கிலிம்பிகா என்று அம்பிகாவிற்கு ஒரு இளைய சகோதரி இருந்தார். கிலிம்பிகாவே நாராயணி என்று. கௌர-கனோதேச-தீபிகா என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. விருந்தாவன தாஸ தாக்கூரர் சைதன்ய பாகவதம் எழுதினார் மாலினி தேவி அவதரித்த இடம் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீவாச பண்டிதரின் பத்தினியான மாலினி தேவி பிறந்த இடம் இதுவேயாகும். விருந்தாவன தாஸ தாகூரர் பிறந்த இடத்திற்கு அருகே இருக்கிறது. பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்ற பிறகு ப...

மோதாத்ருமத்வீபம்

 மோதாத்ருமத்வீபம் 🔆🔆🔆🔆🔆🔆 இந்த தீவு தாஸ்யம், அல்லது சேவகம் எனும் பக்தி சேவையை பிரதிபலிக்கிறது. ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரருடைய புனித ஸ்தலம், வாசுதேவ தத்தரின் புனித ஸ்தலம், ஸ்ரீ  சாரங்க முராரியின் புனித ஸ்தலம் மற்றும் அர்க திலா ஆகிய இடங்கள் இந்த தீவில் நீங்கள் சென்று காணக்கூடிய இடங்களாகும். ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் தன்னுடைய நவத்வீப-பாவ -தரங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பீஷ்ம-திலாவில் பீஷ்மரிடமிருந்து ஆசி பெற்ற பிறகு அழுதுகொண்டே றநான் மோதாத்ரும த்வீபத்திற்கு செல்வேன். வ்ரஜ பூமியிலிருக்கும் பாந்திராவனத்திற்கும்  மோதாத்ரும த்வீபத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை . அங்கிருக்கும் அனைத்து மிருகங்களும் பறவைகளும் உன்னதமானவையாகும். ஸ்ரீ கௌர ஹரி  மற்றும் சீதா இராமருடைய புனித நாமங்களை, இங்கிருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றன. கருணையோடு நிழல் கொடுத்து அந்த  பகுதியையே அழகுபடுத்தி சூரியனை மறைத்திருக்கும்  பல ஆல மரங்கள் இந்த பாந்திராவனத்தில் இருக்கின்றன. மேலும் பகவான்  ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய லீலைகள் என் கண்கள...

சம்பாஹட்டி

  சம்பாஹட்டி 🔆🔆🔆🔆🔆🔆 தன்னுடைய நவத்வீப-பாவ-தரங்கத்தில்  ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "கோலத்வீபத்திற்கு வடக்கே சம்பாஹட்டி என்ற ஒரு இடமுள்ளது. நவத்வீபத்தின் எல்லா இடங்களிலும் இதுவே மிகவும் அழகான இடமாகும். சம்பாஹட்டா கிராமம் என்பது ஒரு உயர்ந்த தீர்த்தமாகும் மேலும் இங்கு கௌர கதாதரரை கவி. ஜெயதேவர் வழிபட்ட மிக அழகிய இடம். வாணிநாதருடைய இல்லத்தில் ஸ்ரீ சச்சி நந்தனர் தன் சகாக்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தார். சம்பாஹட்டா எனும் கிராமத்தில் சம்பக மலர்கள் இருக்கும் ஒரு வனத்தில் தான் சம்பகலதா சகி பூக்களை பறிக்க வருவார். வ்ரஜ பூமியில் கிருஷ்ணரும் பலராமரும்  ஓய்வெடுத்த கதிரவனத்திற்க்கும்  நவத்வீபத்திலிருக்கும் இந்த இடத்திற்கும்  எந்த வேறுபாடுமில்லை." சம்பாஹட்டி என்று எதனால் இந்த இடம் அழைக்கப்படுகிறது? 🔆🔆🔆🔆🔆 பகவான் நித்யானந்தர் , ஸ்ரீஜீவ கோஸ்வாமி , ஸ்ரீவாச பண்டிதர் மற்றும் பல  பக்தர்களுடன்  நவத்வீப தாம பரிக்கிரமா செல்லும் பொழுது சம்பாஹட்டி எனும் கிராமத்தை அடைந்தனர். பகவான் கௌரங்கரின் மிக உயர்ந்த பக்தரான த்வஜ வாணிநாதருடைய இல்லத்தில...