ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூர் 🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ சைதன்ய பாகவதத்தை இயற்றிய ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரர் மோதாத்ரும தத்தில் தீவீபத்தில் பிறந்தார். வேதவியாசரின் இந்த அவதாரமாகிய இவர் ஸ்ரீ நித்தியானந்த பிரபுவின் சீடராவார். ஸ்ரீ கேசவ பாரதியின் வம்சாவளியைச் சேர்ந்த கோபிநாத பிரம்மச்சாரி உள்ளிட்ட பல சீடர்கள் இருந்தனர். ஸ்ரீவாச பண்டிதரின் தங்கை மகளான நாராயணீ தேவியே ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரரின் தாயாவார். இவர் நான்கு வயது இருந்தபோது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கைகளிலிருந்து அவருடைய உத்திஸ்டையை பெற்றார். பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது அம்பிகா என்ற பெண் தன் பாலை அவருக்கு உண்பித்தார். கிலிம்பிகா என்று அம்பிகாவிற்கு ஒரு இளைய சகோதரி இருந்தார். கிலிம்பிகாவே நாராயணி என்று. கௌர-கனோதேச-தீபிகா என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. விருந்தாவன தாஸ தாக்கூரர் சைதன்ய பாகவதம் எழுதினார் மாலினி தேவி அவதரித்த இடம் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீவாச பண்டிதரின் பத்தினியான மாலினி தேவி பிறந்த இடம் இதுவேயாகும். விருந்தாவன தாஸ தாகூரர் பிறந்த இடத்திற்கு அருகே இருக்கிறது. பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்ற பிறகு ப...