ஜனக மகாராஜா வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இவர் சீதாதேவியின் தந்தையும் பகவான் ராமரின் மாமனாருமாவார். விதேக அல்லது மிதிலா வின் (இன்றைய பீஹார்) அரசரான இவர் ஹிராஷ்வரோமாவின் முதல் புதல்வர் ஆவார். அவர் ஒரு யாகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தில் ஒரு பகுதியை உழும்போது அந் நிலத்தில் இருந்து சுயமாகத் தோன்றிய ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டெடுத்தார். எனவே அவர் க்ஷீரத்வஜா என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையே சீதா தேவி ஆவார். ராஜரிஷி ஜனக மகாராஜாவின் மகளான சீதாதேவி, சிலசமயங்களில் ஜானகி என்றும் அழைக்கப்பட்டார். வசிஷ்ட மகரிஷியின் பேரனும் வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவரே ஜனக மகாராஜாவின் ஆன்மிக குரு ஆவார். சர்வ வல்லமை பொருந்திய பகவான் பலராமர் மிதிலாவில் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு மிகவும் பிரியமான பக்தர் ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்டார். மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதரான ஜனக மகாராஜா, நிமி சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தவர் ஆவார். மஹாராஜா நிமி மிகப்பெரிய யாகம் ஒன்று செய்யும் பொருட்டு வசிஷ்ட மகரிஷியைத் த...