Skip to main content

Posts

Showing posts from February 19, 2023

பரமபுருஷரைத் துதிக்கும் முறையே கீர்த்தனம் எனப்படுகிறது,

  அஹம் ச காயம்ஸ் தத் - வித்வான் ஸ்த்ரீபி : பரிவ்ருதோ கத : ஞாத்வா விஸ்வ - ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட - ஸ்ரீ : க்ருத - ஹேலன : மொழிபெயர்ப்பு நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் : அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன் . நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன் . இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் ( சக்தி வாய்ந்த தேவர்கள் ), “ நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால் , அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய் ” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர் . பொருளுரை ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும் , அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் ( ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ :) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன . அதாவது , ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும் , அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும் , தேவர்களின் மகிமைகளை அல்ல . துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு ...

ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமை

    நெருப்பானது , ஒன்றுமறியாத ஒரு குழந்தையால் கையாளப்பட்டாலோ அல்லது அதன் சக்திகளை நன்கறிந்த ஒருவனால் கையாளப்பட்டாலோ அது செயற்படவே செய்யும் . உதாரணமாக , காய்ந்த வைக்கோல் அல்லது புல் உள்ள ஒரு வயலில் , நெருப்பின் சக்தியை அறிந்த ஒரு முதியவர் தீ வைத்தாலோ அல்லது ஒன்று ம்  மறியாத ஒரு குழந்தை தீ வைத்தாலோ அது எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம் . அதுபோலவே , ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமையை ஒருவன் அறிந்தோ அல்லது அறியாமலோ இருக்கக் கூடும் . ஆனால் அப்புனித நாமத்தை ஒருவன் ஜபித்தால் , எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவன் விடுபடுவான் . ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன் , அந்த மருந்தை உட்கொண்டால் , அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட , அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது . ஏனெனில் , அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா , தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல . அதுபோலவே , பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும் , அறிந்தோ , அறிய...