Skip to main content

Posts

Showing posts from October 28, 2021

அரிஷ்டாசுரன்

  விருந்தாவனம் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் ஆழ்ந்திருந்தது . எல்லோரும் அவரின் லீலைகளை எண்ணியபடிப் பரமானந்த சாகரத்தில் மூழ்கியிருந்தார்கள் . ஆனால் ஜடவுலகம் மாசுக்கள் நிரம்பியதாகையால் விருந்தாவனத்திலும் கூட அசுரர்கள் அமைதியைக் குலைக்க முற்பட்டார்கள் . அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து , குளம்புகளால் பூமியைக் கிளறியபடிக் குழப்பம் விளைவிக்கலானான் . பெரும் பூகம்பம் ஏற்பட்டதுபோல் நிலம் அதிர்ந்தது . அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறியபின் கிராமத்தினுள் நுழைந்தான் . அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாகவிருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும் , சினையுற்றிருந்த சில பசுக்களுக்கும் கர்ப்பச் சேதம் ஏற்பட்டது . எருதின் உடல் மிகப் பெரியதாகவும் , பலமுள்ளதாகவுமிருந்ததால் , மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்திருப்பதுபோல் அவனின் உடல் மேலும் ஒரு மேகம் சுற்றி வந்தது . அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண் , ப...

கோலோக விருந்தாவனத்தில் ராதா குண்டத்தின் தோற்றம்

  கோலோக விருந்தாவனத்தில்  ராதா குண்டத்தின் தோற்றம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் ராதா-குண்டம் மற்றும் சியாமா-குண்டம் எவ்வாறு ஆன்மீக உலகில் முதலில் தோன்றின என்பது பற்றி ஆதி-புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கோலோக விருந்தாவனத்தில்,  ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் ஒரு வனத்தில்  ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். கோபியர்கள் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர்.  ராதாராணியின் இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்த கிருஷ்ணர் திடீரென்று தீவிர அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கிருஷ்ணரின் உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் ராதாராணியின் மனநிலையைப் பெறத் தொடங்கினார். அந்த மனநிலையில் , இறைவன் கண்ணீரை வடித்து, கிருஷ்ணரின் பெயரை மீண்டும் மீண்டும் அழைக்கத் தொடங்கினார்; பின்னர் விரக்தியால், தன்னைத் தேடி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினார். கிருஷ்ணரை தன் சொந்த வடிவத்திலும் மனநிலையிலும் பார்த்து, அருகில் உள்ள காட்டில் மறைந்து சென்றதை பார்த்த ஸ்ரீமதி ராதாராணியும் தீவிர அன்பின் மனநிலையில் அதே வனத்திற்குள் நுழைந்தார். ராதாராணியுடைய உணர்வுகள...