சிவபெருமான் ஆடம்பரமான ஆடைகள் , ஆபரணங்கள் , மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் இறுதியில் நாய்கள் தின்னப் போகும் இந்த உடலை அலங்கரிப்தில் மோகங்கொண்டவர்கள் அதைத் தானானக் கருதி மிகவும் ஆடம்பரமாக போற்றிப்பாதுகாக்கின்றனர் . இம்மனிதர்கள் சிவபெருமானைப் புரிந்து கொள்வதில்லை . மாறாக ஆடம்பரமான செல்வ வளத்திற்காக அவர்கள் அவரை அணுகுகின்றனர் . இரண்டு வகையான பக்தர்கள் சிவபெருமானுக்கு உண்டு . ஒரு பிரிவினர் முழு லோகாயத வாதிகள் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வளங்களை சிவபெருமானிடம் வேண்டுகின்றனர் . மற்றொரு பிரிவினர் அவரோடு ஒன்றாக இணைய வேண்டுமென்று விருமபுகின்றனர் . அவர்கள் பெரும்பாலும் மாயாவாதிகள் ஆவர் . அவர்கள் “ ஸிவோ ( அ ) ஹம் ” “ நான் சிவபெருமான் ” அல்லது “ முக்தி பெற்ற பிறகு நான் சிவபெருமானுடன் இணைவேன் ” என்று ஓதுகின்றனர் . மாறாக கர்மாக்ளும் , ஞானிகளும் பொதுவாக சிவபெருமானின் பக்தர்களேயாவர் . ஆயினும் அவர்கள் அவரது உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதில்லை . சில நேரங்களில் சிவபெருமானின் பக்தர்கள் அவரை...