Skip to main content

Posts

Showing posts from November 25, 2021

பகவான்

“பக” என்ற சொல்லுக்கு “வளம்” என்று பொருள். “வான்” என்றால் “உடையவர்”. (பகவான்- வளங்கள், சிறப்புக்கள், செல்வங்கள் உடையவர்) படைப்பின் சிறப்புக்களும், பகவானிடம் பொருந்தியுள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் (கடோபநிஷத் 2.2.13) “நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்” ‘நித்ய’ (ஒருமை) பகவான், ‘நித்யானாம்’ (பன்மை) ஜீவாத்மாக்கள் அதாவது உயிர்வாழிகள், ‘நித்ய நித்யானாம்’ - நாம் பலர், கடவுள் ஒருவரே. ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண...