Skip to main content

Posts

Showing posts from June 15, 2021

உண்மையான யோகப் பயிற்சி

  ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன: நாத்-யுச்சரிதம் நாதி-நீசம் சைலாஜின-குஷோத்தரம் தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரிய-க்ரிய: உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத் யோகம்-ஆத்ம-விஷுத்தயே மொழிபெயர்ப்பு ****************** யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும். பொருளுரை ****************** "புனிதமான இடம்" என்பது புண்ணிய யாத்திரைத் தலங்களைக் குறிக்கின்றது. இந்தியாவில் யோகிகள் அனைவரும் (ஆன்மீகர்களும் பக்தர்களும்) வீட்டை விட்டு வெளியேறி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் ஓடும் பிரயாகை, மதுரா, விருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை அடைந்து, தனிமையில் யோகத்தைப் பயில்கின்றனர். ஆனால் இஃது அனைவருக்கும் சாத்தியமானதல...

உணர்வே ஆத்மாவின் அறிகுறியாகும்

 

ஆத்மா

 

ஆத்மா

 

ஆத்மா