அர்ஜுனன் சுபத்ரா தேவி விவாஹ ம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பரீட்சித் மகாராஜா கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி மேலும் அறிய கிருஷ்ணரின் தூண்டுதலின் பேரில் தாத்தா அர்ஜுனன் எவ்வாறு கடத்திச் சென்றார் என்பதை கூறும்படி சுகதேவ கோஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். தாத்தா எப்படிப் பாட்டியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாரென்பதைத் தெரிந்துகொள்ள பரீட்சித் மகாராஜாவுக்கு அவ்வளவு ஆவல். சுகதேவ கோஸ்வாமி அந்தச் செய்தியை விவரிக்கலானார், “உமது தாத்தாவான மாவீரன் அர்ஜுனன் பல புனிததலங்களுக்கு யாத்திரை சென்ற போது ஒரு சமயம் பிரபாசக க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் தன் தாய்மாமனான வசுதேவரின் மகளான சுபத்ராவின் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளை பகவான் பலராமர் நடத்தி வருவதாகக் கேள்விப்பட்டார். சுபத்ராவின் தந்தையான வசுதேவர் மற்றும் சகோதரனான கிருஷ்ணரின் விருப்பத்துக்கு எதிராக சுபத்ராவைத் துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்க பலராமர் எண்ணியிருந்தார். ஆனால் அர்ஜுனன் சுபத்ராவின் கரம் பற்ற ஆசைப்பட்டார்.” சுபத்ராவின் அழகில் மனதைப் பறிகொடுத்திருந்த அர்ஜுனன் அவளை அடைவதில் தீவிரமாக இருந்ததால் அதற்கு ஒரு திட்டம் தீட்டினார். அத...