Skip to main content

Posts

Showing posts from May 22, 2025

ஸனாதன தர்மம்

  சதுர் யுகாந்தே காலேன க்ரஸ்தான் ச்ருதி - கணான் யதா தபஸா ரிஷயோ ‘பஸ்யன் யதோ தர்ம: ஸனாதன: மொழிபெயர்ப்பு ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர். பொருளுரை இச்சுலோகத்தில், தர்ம: மற்றும் ஸனாதன: எனும் சொற்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஸனாதன என்றால் “நித்தியமான” என்றும், ‘தர்ம’ என்றால் “வர்ணாஸ்ரம கடமைகள்” என்றும் பொருள்படும். சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை, மதக் கொள்கைகளும், வர்ணாஸ்ரம கடமைகளும் படிப்படியாக சீரழிந்து போகின்றன. சத்திய யுகத்தில் மதக் கொள்கைள் வழி பிறழாமல், முழுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் திரேகாயுகத்தில், இக்கொள்கைகள் எப்படியோ அலட்சியம் செய்யப்பட்டு, மதக் கடமைகளில் முக்கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. துவாபர யுகத்தில், மதக் கொள்கைகளில் பாதி பாகம் மட்டுமே தொடர்கின்றது. மேலும் கலியுகத்தில், மதக் கொள்கைகளில் கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. இவும் படிப்படியாக மறைந்து வருகிறது. கலியுகத்தின் இறுதியில், மதக் கொள்கைகள், அல்லது மனித குல...