Skip to main content

Posts

Showing posts from June 20, 2021

பாண்டவ நிர்ஜல ஏகாதசி

  மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரரின் சகோதரனான பீமசேனர், பெருமுனிவரான வியாசதேவரிடம் கேட்டார். ஓ! கற்றறிந்த மற்றும் வணக்கத்திற்குரிய பெரியவரே! என் தாய் குந்திதேவி, எனது சகோதரர்களான யுதிஸ்டிரர், அர்ஜுனன், நகுலா, சகாதேவா, மற்றும் திரௌபதி ஆகியோர் ஏகாதசி நாளன்று எதையும் உண்ணுவதில்லை. அவர்கள் என்னையும் ஏகாதசியன்று விரதம் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தவர். ஏகாதசி விரதம் வேத சாஸ்திரங்களின் கட்டளையாக இருப்பினும் என்னால் பசியை பொறுத்துக் கொள்ள இயலாததால் என்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு கூறுவேன். ஆனால் என்னால் இயன்றவரை தானங்கள் செய்வேன். விதிமுறைகளுக்கேற்ப பகவான் கேசவனை வணங்குவேன். ஆனால் உண்ணாவிரதம் மட்டும் என்னால் மேற்கொள்ள முடியாது. ஆகையால், உண்ணாவிரதம் இருக்காமல் எவ்வாறு ஏகாதசியின் பலனை அடைவது என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசதேவர் கூறினார். ஓ! பீமா நீ நரகலோகத்தைக் த...

கங்காமாதா கோஸ்வாமினி

  கங்காமாதா கோஸ்வாமினி இன்றைய வங்காள நாட்டில் (தற்போதைய பங்களாதேஷ்) ராஜ்ஷாஹி என்ற மாநிலத்தில்  உள்ள புந்தியாவின்  அரசர் நரேஷ் நாராயணாரின் ஒரே மகளாவார்.  அவருடைய குழந்தை பருவத்தில் அவர் சச்சி என்று அழைக்கப்பட்டார். தனது இளவயது முதலே பகவத் விசயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மேலும் குறுகிய காலத்திற்குள்ளேயே, வியாகரணங்கள், காவியங்கள் மற்றும் பல சாஸ்திரங்கள் குறித்து உரையாட ஆரம்பித்தார். சச்சி வளர்ந்ததும் அவரது அழகும், கருணையும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அவருடைய மனம் முழுமையாக மதனகோபாலனிடம் ( பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்)  ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த அவர், தான் பெளதிக வாழ்க்கையில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தான் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் உறுதியாக கூறினார். சச்சியின் இந்த முடிவால் அவரின் பெற்றோர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.  சிறிது காலத்திற்குப் பிறகு அரசனும் அரசியும் உடல் நலக் குறைவினால்  மரணம் அடைந்தனர். அவர்களுடைய மறைவிற்கு பிறகு அரச...