Skip to main content

Posts

Showing posts from November 22, 2020

பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல்

பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம் நந்த மகாராஜாவும் பிற ஆயர்களும் சிவபெருமானை வழிபடுவதற்காகத் தமது குடும்பத்தினருடன் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து அம்பிகா வனம் என்னும் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் சரஸ்வதி நதியில் நீராடி பகவான் விஷ்ணுவின் ஒரு வடிவமான பகவான் சதாசிவனை வழிபட்ட பின்னர் அன்றைய இரவுப் பொழுதை அக்காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் துயில் கொண்டிருந்த பொழுது மிகுந்த பசியுடைய ஒரு பாம்பு அங்கு வந்து நந்த மகாராஜாவை விழுங்கத் தொடங்கியது. ஆபத்தில் சிக்கிக் கொண்ட நந்தமகாராஜா “ஓ, கிருஷ்ணர்! என் மைந்தனே, சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாயாக” என்று கூக்குரலிட்டுக் கதறினார். நந்தமகாராஜாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஆயர்கள் அங்கு கிடந்த மரக் கொம்புகளைக் கொண்டு அப்பாம்பை அடிக்கத் தொடங்கினர். ஆனால் அப்பாம்போ நந்த மகாராஜாவை விடுவதாக இல்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அப்பாம்பினைத் தனது தாமரைத் திருவடிகளினால் தீண்டினார். உடனே அங்கிருந்த பாம்பு மறைந்து அந்த இடத்...

கோபாஷ்டமி

  பகவான் பலராமரும், பகவான் கிருஷ்ணரும் தமது பௌகண்ட வயதினை (ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள பருவம்) அடைந்த பொழுது, நந்த மகாராஜாவின் தலைமையின் கீழுள்ள ஆயர்குலப் பெரியவர்கள், கிருஷ்ணரும் பிற ஆயர்குலச் சிறுவர்களைப் போல் பசுக்களை மேய்க்கலாம் என்று முடிவு செய்தனர். விருந்தாவனத்தில் உள்ள ஆயர்குலப் பெரியோர்கள், இவர்கள் இருவரையும், பசுக்களை மேய்ப்பதற்கு பல யோசனைகளுக்கு பின் அனுமதியளித்தனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அது நாள் வரை கன்றுகளை மட்டுமே கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர்,  இந்த கேபாஷ்டமி நன்நாளில் பசுக்களையும், காளைகளையும் கன்றுகளையும் பாதுகாக்கும் பொறுப்பிற்குரியவராகி விட்டார். இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட தீர்மானித் ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஆண்களும், ஆண் பிள்ளைகளும் பங்கு கொள்வார்கள். ஸ்ரீமதி ராதாராணி மற்றும்  அவரது நண்பர்களான இதர கோபியர்களும்  இந்த லீலைகளில் பங்கெடுத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் இந்த நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்பினர்.  ஸ்ரீமதி ராதாராணிக்கும் சுபலாவிற்கும் உருவ ஒற்றுமை இருந்ததால் அவர் சுபலாவின்  வேஷ்டி  மற்றும்...