முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மனித அல்லது மிருக உருவங்களை சில சமயங்களில் ஏற்கிறார் . ஆனால் அவர்களின் இயல்புகளை அவர் ஒருபோதும் ஏற்பதேயில்லை . தவத்தினாலும் , துறவினாலும் மனிதன் கடவுளாகலாம் என்ற தத்துவம் குறிப்பாக இந்தியாவில் இன்று அதிகரித்துள்ளது . பகவான் ஸ்ரீ ராமர் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகியோர் பகவான்களே என்று வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதை முனிவர்களும் , ரிஷிகளும் அறிந்துள்ளனர் . இதனால் யோக்கியமற்ற பல மனிதர்களும் தங்களது சொந்த அவதாரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர் . இவ்வாறு கடவுளின் ஓர் அவதாரத்தை உண்டுபண்ணும் இம்முறை , குறிப்பாக வங்காளத்தில் சாதாரண தொழிலாகியிருக்கிறது . பிரபலமான எந்தவொரு மனிதரும் , யோக சக்திகளால் சில மாயாஜால வித்தைகளை செய்து காட்டும் போது , மக்கள் அவரை பரம புருஷரின் ஓர் அவதாரமாக எண்ணுகின்றனர் . ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வகையைச் சேர்ந்த ஓர் அவதாரமல்ல . அவர் உண்மையான பரம புருஷராக இருந்தார் . அவர் தமது தாயார் முன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவாகத் தோன...