Skip to main content

Posts

Showing posts from January 6, 2021

புலியும், பசுவும்

  புலியும், பசுவும் ஆதாரம் : பத்ம புராணம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன் காலத்தில் பிரபஞ்சன் என்ற ஒரு அரசன் இருந்தான் மகாபலசாலியாகிய அந்த மன்னன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் ஒரு மான் வருவதைக் கண்டான் உடனே அந்த மானை நோக்கி ஒரு கூரிய அம்பை எய்தான் துள்ளிக் குதித்து விழுந்த மான் வேகமாகச் சுற்றுமுற்றும் பார்த்த போது கைகளில் வில் அம்புடன் ஓடி வந்து கொண்டிருந்த மன்னனைப் பார்த்தது . உடனே அந்த மான், "அடே முடா , என்ன காரியம் செய்துவிட்டாய் நான் தலையைக் குனிந்தபடி என் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதைக் கவனிக்காமல் என்னுடைய மாமிசத்தைத் தின்பதற்கு ஆசைப்பட்டு என்மேல் அம்பு எய்துவிட்டாயே? பால்கொடுக்கும் தாயைக் கொல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ? இரக்கமில்லாத ராட்சசனைப்போல் இக்கொடிய காரியத்தைச் செய்த நீ அரக்க சுபாவத்துடன் அலையும் கொடிய புலியாக மாறிவிடக்கடவாயாக" என்று சபித்தது அரசன் அதிர்ச்சியடைந்து போய் நின்றுவிட்டான். அந்த மானைப் பார்த்து இருகரங்களும் கூப்பியவனாய், "ம...