Skip to main content

Posts

Showing posts from December 3, 2021

தமோ குணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா ஸம்ரம்பீ பிந்நத்ருக் பாவம் மயி குர்யாத்ஸ தாமஸ : மொழிபெயர்ப்பு பொறாமை , தற்பெருமை , வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய ( தமோ ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது . பொருளுரை மிகவுயர்ந்த , மிகவும் புகழ்வாய்ந்த மதம் என்பது காரணம் அற்ற , செயல் நோக்கமற்ற பக்தித் தொண்டைச் செய்தலாகும் என்று ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம் இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது . தூய பக்தித் தொண்டில் , பரம புருஷ பகவானை மகிழ்விப்பது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் . அது உண்மையில் நோக்கமல்ல ; அது உயிரினத்தின் தூய நிலையாகும் . கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் , ஒருவர் பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , முழுச் சரணாகதியில் உண்மை ஆன்மீக குருவின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் . ஆன்மீக குருவானவர் பகவானின் பிரத்யட்ச பிரதிநிதி ஆவார் . ஏனெனில் , அவர் சீட மரபால் , பகவானின் உபதேசங்களை உள்ளவாறே தாம் பெறுவார் ; பிறருக்கும் கொடுப்பார...

ரஜோ குணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  விஷயானபிஸந்தாய யச ஐஸ்வர்யமேவ வா அர்ச்சாதாவர்ச்சயேத்யோ மாம் ப்ருதக்பாவ : ஸ ராஜஸ : மொழிபெயர்ப்பு மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில் , உலக இன்பம் , புகழ் , பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும் . பொருளுரை மாறுபட்ட சிந்தனையாளர் எனும் சொல் கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும் . இந்தத் தொடர்பில் உள்ள வடமொழிச் சொற்கள் பிந்ந — த்ருக் மற்றும் ப்ருதக் — பாவ : ஆகும் . மாறுபட்டவர் என்பவர் தன் ஆசையை பகவானின் ஆசையிலிருந்து பிரித்தும் வேறுபடுத்தியும் பார்ப்பவர் ஆவார் . கலப்பட பக்தர்கள் அல்லது ரஜோ மற்றும் தமோ குணத்தில் உள்ள பக்தர்கள் , பகவானின் ஆசை பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதலாகும் என்று நினைக்கின்றனர் . அம்மாதிரி பக்தர்களின் ஆசை அவர்களின் புலன் நுகர்ச்சிக்காக பகவானிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெறுவதாகும் . இதுவே மாறுபட்டவனின் மனப்பாங்கு ஆகும் . உண்மையில் முந்தைய அத்தியாயத்தில் தூய பக்தி விளக்கப்பட்டுள்ளது . பகவானின் மனமும் பக்தரின் ...

ஸத்வகுணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  கர்மநிர்ஹாரமுத்திஸ்ய பரஸ்மின் வா ததர்பணம் யஜேத்யஷ்டவ்ய மிதி வா ப்ருதக் பாவ : ஸ ஸாத்விக : மொழிபெயர்ப்பு ஒரு பக்தர் பரம புருஷ பகவானை வழிபட்டு செயல் விளைவுகளின் மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தமது செயல்களின் பயனை அர்ப்பணிக்கும் பொழுது , அவரது பக்தி ஸத்வ குணத்தில் இருக்கும் . பொருளுரை பிராமணர்கள் , க்ஷத்திரியர்கள் , வைசியர்கள் , சூத்திரர்கள் இவர்களுடன் பிரம்மச்சாரிகள் , கிருஹஸ்தர்கள் , வானப்பிரஸ்தர்கள் மற்றும் சந்நியாசிகள் அனைவரும் வர்ணங்கள் மற்றும் ஆஸ்ரமங்களின் எட்டுப் பிரிவுகளின் உறுப்பினர்கள் ஆவர் . பரம புருஷ பகவானைத் திருப்தி செய்வதற்காக அவர்களுக்கென்று நிறைவேற்றுவதற்கென விதிக்கப்பட்ட கடமைகள் உண்டு . அச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு , முடிவுகள் பகவானிடம் அர்ப்பணிக்கப்படும் பொழுது , அவை கர்மார்ப்பணம் என அழைக்கப்படுகின்றன , அதாவது பகவானைத் திருப்தி செய்வதற்காக நிகழ்த்தப்படும் கடமைகள் என்று பொருள் . ஏதேனும் மயக்கம் அல்லது முந்தைய தவறு இருந்தால் , இந்த அர்ப்பணிக்கும் முறையால் அத்தவற...