அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா ஸம்ரம்பீ பிந்நத்ருக் பாவம் மயி குர்யாத்ஸ தாமஸ : மொழிபெயர்ப்பு பொறாமை , தற்பெருமை , வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய ( தமோ ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது . பொருளுரை மிகவுயர்ந்த , மிகவும் புகழ்வாய்ந்த மதம் என்பது காரணம் அற்ற , செயல் நோக்கமற்ற பக்தித் தொண்டைச் செய்தலாகும் என்று ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம் இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது . தூய பக்தித் தொண்டில் , பரம புருஷ பகவானை மகிழ்விப்பது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் . அது உண்மையில் நோக்கமல்ல ; அது உயிரினத்தின் தூய நிலையாகும் . கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் , ஒருவர் பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , முழுச் சரணாகதியில் உண்மை ஆன்மீக குருவின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் . ஆன்மீக குருவானவர் பகவானின் பிரத்யட்ச பிரதிநிதி ஆவார் . ஏனெனில் , அவர் சீட மரபால் , பகவானின் உபதேசங்களை உள்ளவாறே தாம் பெறுவார் ; பிறருக்கும் கொடுப்பார...