Skip to main content

Posts

Showing posts from February 14, 2023

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நவத்வீபம் என்ற பெயரில் அப்போது அறியப்பட்ட ஊர் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதை அறிந்து, ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த நவத்வீபம் நிச்சயம் மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். எனவே, மஹாபிரபு அவதரித்த அன்றைய நவத்வீபமும் மக்கள் கூறும் நவத்வீபமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

  கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... ***********     5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!... 1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.   [பாகவத புராணம் 12.2.1] 2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும் மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அட...

சரணாகதியின் ஆறு அறிகுறிகள்

  சரணாகதியின் ஆறு அறிகுறிகள்  ********** ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:  ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோ  கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்ம-நிகே்ஷப-கார்பண்யே  ஷட்-விதா ஷரணாகதி: -  (1) கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விஷயங்களை ஏற்றல்,  (2) கிருஷ்ண உணர்விற்கு எதிரான அல்லது பாதகமான விஷயங்களைக் கைவிடுதல், (3) கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவார் என்று பூரண நம்பிக்கை வைத்தல்,  (4) கிருஷ்ணரை தனது பாதுகாவலராக ஏற்றல்,  (5) ஆத்மாவை அர்ப்பணம் செய்தல்,  (6) எப்போதும் தன்னை மிகத் தாழ்வாக வைத்து பணிவுடன் நடந்து கொள்ளுதல். (ஹரி-பக்தி-விலாஸம்  (11.676)) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண   கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,   ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram 🍁🍁🍁🍁🍁 ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்...

கிருஷ்ண தரிசனம்

  கிருஷ்ண தரிசனம் ******* கிருஷ்ணரின் அழகான உருவத்தால் ஒருவன் கவரப்பட வேண்டும். அவர் எல்லாரையும் கவரக்கூடியவர் என்பதால், அவருக்கு கிருஷ்ணர் என்று பெயர். கிருஷ்ணருடைய அழகான, வலிமை நிறைந்த, சக்தி வாய்ந்த தரிசனத்தால் கவரப்படுபவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல்வேறு விதமான ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர்—அவர்களில் சிலர் அருவ பிரம்மனின் தரிசனத்தில் பற்றுக் கொண்டவர்கள், வேறு சிலர் பரமாத்மாவினால் கவரப்படுகின்றனர்; ஆனால், பரம புருஷ பகவானின் உருவத்தினால் கவரப்படுபவர்கள், அதிலும் சிறப்பாக, பரம புருஷ பகவான் கிருஷ்ணரிடம் கவரப்படுபவர்கள், ஆன்மீகவாதிகளில் மிகமிகப் பக்குவமானவர்கள்.  (ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை/ பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் பதினெட்டு / பதம் 66) ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram 🍁🍁🍁🍁🍁 ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇 https://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 https://t.me/ud...