கிருஷ்ணா புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதா , ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்களை விளக்குகிறார் ; “ உடலுக்குள் ஐந்து பிரிவுகளைக் கொண்ட வாழ்வு நிலைகள் உள்ளன . அவை அன்ன - மயம் , ப்ராண - மயம் மனோ - மயம் , விஞ்ஞான - மயம் மற்றும் ஆனந்த மயம் எனப்படுகின்றன . ( இவை , தைத்திரீய உபநிஷத்ததின் பிரம்மாண்ட - வல்லியில் விவரிக்கபப்ட்டுள்ளன ). வாழ்வின் துவக்கத்தில் ஒவ்வொரு ஜீவனும் உணவைப் பற்றிய உணர்வை மட்டுமே கொண்டுள்ளான் . ஒரு குழந்தை அல்லது ஒரு மிருகம் நல்ல உணவைப் பெறுவதால் மட்டுமே திருப்தியடைகிறது . திருப்தியாக உண்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளன . இந்த உணர்வு நிலை , அன்ன - மயம் என்று அழைக்கப்படுகிறது . அன்னம் என்றால் “ உணவு ” என்று பொருள்படும் . இதன்பிறகு உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு நிலையில் ஒருவன் வாழ்கிறான் . ஒருவனால் தன் வாழ்வை எந்த பாதிப்பும் அல்லது அழிவும் இல்லாமல் தொடர முடியுமானால் , தான் மகிழ்ச்சியடைவதாக அவன் நினைக்கிறான் . இந்நிலை , உயிர் வாழ் உணர்வு ( ப்ராண - மயம் ) என்று அழைக்கப்படுகிறது . இந்நிலைக்குப் பிறக...